Thursday, July 2

மகளே!

>முத்து  முத்து மகளே, 
>
முகம் காணாத மகளே 
>
மாதங்கள் பத்து மனதினில் 
>
சுமந்து 
>
கற்பனையில் பெற்ற கண்மணியே 
>
நான் உனக்கு கவிதையில் 
>
எழுதும் கடிதம் 

>எழுதுகிறேன் ஒரு கடிதம் 

>வானத்து மலரே வையத்து 
>
நிலவே 
>
வாழ்க்கையில் பொருளே வா 

>மலடியின் மகளே மகள் எனும் 
>
கனவே 
>
மடியினிலே நீ வா 

>பாறையில் மலர்ந்த தாமரையே 
>
இரவினில் எழுந்த சூரியனே 
>
எழாமலே எழும் நிலா நீயே 

>முன்னூற் நாள் 
>
கர்ப்பத்திலே 
>
வாராத பெண் நீயடீ 
>
எந்நாளுமே நான் பொம்மைதான் 
>
என்றாலும் தாய்தானடி 

>உலாவும் வானம்பாடியாய் 
>
பண்பாடி வாழ்க கண்ணே 
>
புறாவைப் போல சாந்தமாய் 
>
பண்பாடு போற்று பெண்ணே 
>
நாளொரு மேன்மை நீ பெறுவாய் 
>
நான் பெற்ற இன்பம் யார் 
>
பெறுவார் 
>
பெறாமலே பெறும் சுகம் நீயே! 

>சிந்தாமணி என் கண்மணி 
>
சிற்றாடை நீ கட்டடி 
>
என் மாளிகை முற்றத்திலே 
>
பொன்னூஞ்சல் நீயாடடி 
>
உலாவும் அன்புக் கோகிலம் 
>
எங்கேயும் கானம் பாடு 
>
கனாவில் கூட சோம்பலே 
>
இல்லாமல் ஞானம் தேடு 
>
நல்லவளாக நடை போட்ய் 
>
வல்லவளாகிட தடை ஏது 
>
விழாமலே விழும் மழையே 

>பொல்லாதது உன் பூமிதான் 
>
போராட்டம்தான் வாழ்வடி 
>
கொல்லாமலே கொவாரடி 
>
வராத துன்பம் வாழ்விலே 
>
வந்தாலும் நேரில் மோது 
>
பெறாத வெற்றி இல்லையே 
>
என்றே நீ வேதம் ஓது 
>
ஊமைக்கும் நாக்குகள் 
>
வேண்டுமடி 
>
உரிமைக்கு போரிட தேவையடி 
>
தொடாமலே சுடும் கனல் நீயே! 

2 comments:

  1. நல்லயிருக்க்கு மலர்

    ReplyDelete
  2. இது ஒரு பாடல் அண்ணா...
    கல்கி என்ற படம் :)

    ReplyDelete