Thursday, October 29

என்னென்னவோ என் ஆசைகள்...









பலர் மனதை வருடி,

இன்றும் இனிமையாய் வாழும்

அழகான வரிகள், தித்திக்கும் இசை,

உயிரை உறைய செய்யும் குரல் கொண்ட

சூப்பர் பாட்டு...என்னை தாலாட்டும் கீதம்...


(திரை - திருக்கல்யாணம்

பாடியவர்கள் - ஜெயசந்திரன், s. ஜானகி)

*******************************************************************

அலையே கடல் அலையே

ஏன் ஆடுகிறாய், என்ன தேடுகிறாய்

இன்ப நினைவினில் பாடுகிறாய்

என்னென்னவோ உன் ஆசைகள்


பொன்மணல் மேடை மீதினிலே

வெண்பனி வாடை காற்றினிலே

மயக்கும் மாலை பொழுதினிலே

காதலிஇந்த நாயகன்

பல நாள் வரை காத்திருக்க

என்னென்னவோ உன் ஆசைகள்


அலையே கடல் அலையே

நீ உருகாதே மனம் கலங்காதே

உன் அருகினில் நான் இருப்பேன்

என்னென்னவோ உன் ஆசைகள்


வசந்தத்தைத் தேடும் இளந்தளிரே

வாடையில் வாடும் பனி மலரே

நெஞ்சினில் என்றும் உன் நினைவே

கண்மணி உயிர் காதலி

என் கைகளில் தவழ்ந்திருக்க

என்னென்னவோ என் ஆசைகள்


கோவிலைத் தேடி தவமிருக்க

தேவியின் நாயகன் துணையிருக்க

ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க

ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க

தெய்வமே இளம் தென்றலே

எங்கள் காதலை வாழ வைப்பாய்

என்னென்னவோ நம் ஆசைகள்


அலையே கடல் அலையே

நீ உருகாதே மனம் கலங்காதே

உன் அருகினில் நான் இருப்பேன்

என்னென்னவோ நம் ஆசைகள்

என்னென்னவோ நம் ஆசைகள்

*******************************************************************


உணர்ந்து கேட்பவர்களுக்கு,

_மனசு லேசாகும், தலை சாய்க்க தோள் தேட தோன்றும்,

ஏனோ, ஏதோ ஒன்னு வருடும், யாருடைய ஞாபகமாவது வரும் சின்ன புன்னகையுடன் :)