Friday, July 3

புது உறவு...













தள்ளாடி தத்தி நடக்கும் போது

உனை நான் கரங்களால் தாங்க,

எனை மெருதுவாய் மெல்ல

சுமந்தவரடா உன் தந்தை,

ஆணா பெண்ணா என்ற வினாக்களுகிடையே

எங்களின் ஊடல் உனை வருத்துமென்று

அமைதி காத்து, விழிகளின் வில் சண்டை செய்தோம்...

எனக்குள் நீ நடத்தும் அதிரடி யுத்தங்கள்

என் செல்களில் இனம் புரியா தாக்குதல்கள்

நீ எனக்களித்த இன்ப வலிகளவை!

 

என் உயிருக்குள் ஓருயிர்,

உன் அப்பாவைத் தவிர்த்து

நான் சுமக்கும் மற்றொரு ஜீவன்

என்னில் ஒரு பாதி – நீ,

இருவராக மட்டுமே வாழ்ந்த எங்களுக்கு

புதிய வாழ்வைக் காட்ட வந்த தேன் சிட்டு

இறைவன் எங்களுக்களித்த உயிருள்ள சீதனம்

புன்னகைக்கும் விண்மீன் – நீ,

எங்கள் வாழ்வின் முழுமை - உன் வருகை!


No comments:

Post a Comment