Tuesday, August 11

காத்திருப்பேன்...







சத்தமின்றி மெல்ல மிருதுவாய்

என் வாழ்வில் நுழைந்தாய்

எப்படி பறிகொடுத்தேன் என்னை? – உன்னை

துளி கூட அறியாது!

மன தவிப்பு தாளாமல் உன் வசம் ஆனேனா?

அல்ல ஆழமாய் உன் மேது ஓர் ஈர்ப்பு கொண்டேனா?

என் கனவின் நீ நுழைவாய் என்று அறியாது

உறக்கத்தில் மென்மையாய் மிதந்தேன்

பல காலம் காத்திருந்தேன்

உன் போன்ற ஒருவனை சந்திக்க

இப்போது நீ என்னோடு; என் அருகில்

இனிமையாய் தான் இருக்கும் இவை நினைவானால்…


இப்போது உன் முன் நிற்கிறேன்

திறந்த மனதோடு, உன்னை மட்டும் சுமந்து - நீயும்

உன் மனக்கதவை திறந்துவிடுவாய்

என்னோடு வாழ்வை பகிர்வாய் என்று

உன்னோடு நான் நெருங்க

உன் அணைப்பில் நான் கரைந்து

உன்னோடு கலந்துவிட வேண்டும்!

உன் குறும்பு பார்வையால் நான்

கூனி குறுகி புன்னகைக்க வேண்டும்!

உன்னில் உறைந்து என் உயிர் சிரிக்க வேண்டும்!

உன் மார்பில் முகம் புதைத்து நான் வாழ வேண்டும்!

மரணத்தைக்கூட நான் உன் மடியில் தழுவ வேண்டும்!

யாரடா நீ? புதுமையாய் ஏதோவொன்று உள்ளே நிகழ்கிறது!?

என்ன இது??? எப்படி என்னுள்???










உன்னால் முடிந்தால்

என் மனதை ஆழமாய் உற்று பார்

உன் மனதை என்னிடம் கொடு

சத்தியமாய் துன்புறுத்தவோ

வதைக்கவோ, சிதைக்கவோ மாட்டேன்…

அத்துணை கொடியவளல்ல… உன்னை

மனதில் சுமக்கும் உன் இரண்டாம் தாயடா நான்!


என் தவிப்புகளைப் புரிந்துக் கொள்ள

கஷ்டமாய், ஏளனமாய், புதிராய், கேளியாய் இருப்பினும்…

என் காதல் முழுமையையும்

தந்துவிட்டேன் – உன்னிடம்…..

சீக்கிரம் வந்து என் கைகளைப் பற்றிக்கொள்…

என் காதல் உன்னையும் உறைய வைக்கும்…

அந்த திருநாள் தூரமில்லை – என் உண்மை

காதல் என் பக்கமிருப்பதால்!

காலமெல்லாம் உனக்காகவே காத்திருப்பேன்...


என்றென்றும் மனதார உன்னோடு வாழும்,

உன்னவள் :)

7 comments:

  1. //காலமெல்லாம் உனக்காகவே காத்திருப்பேன்... //

    காலமெல்லாம் உனக்காகவே காத்திருப்பேன்...என்ற வரிகளில் ஒன்று சேர்வீர்கள் என்ற நம்பிக்கை இன்மை தெரிகிறதே.

    காலமெல்லாம் காத்திருப்பீர்களா? விரைவில் ஒன்று சேர்வீர்களா?

    ReplyDelete
  2. @ tamilvanan
    //காலமெல்லாம் உனக்காகவே காத்திருப்பேன்...என்ற வரிகளில் ஒன்று சேர்வீர்கள் என்ற நம்பிக்கை இன்மை தெரிகிறதே.//

    காத்திருப்பது காதலில் சுகம். நம்பிக்கை இருக்கும் அதே வேளையில் கொஞ்சம் பயமும் இருந்தால் தான் ஒன்று சேர்வதற்கான முயற்சி பிறக்கும்!

    காத்திருப்பேன்...சேர்வேன், என்னவரை சந்தித்த பின்னர், இறைவனின் விருப்பமும் அதுவென்றால்...

    கருத்திற்கு நன்றி :)

    ReplyDelete
  3. தொடர்ந்து நிறைய கவிதைகள் வாசியுங்கள் மல்ர். உங்கள் தேடல் வளரட்டும். கவிதை முயற்சியும் தொடரட்டும்

    ReplyDelete
  4. மிக்க நன்றிங்க :)

    ReplyDelete
  5. எப்படி பறிகொடுத்தேன் என்னை? – உன்னை

    துளி கூட அறியாது!
    ///

    எல்லாம் நேரக்கொடுமை

    ReplyDelete
  6. பெரிசா இருந்தாலும் சிறப்பா இருக்கு

    ReplyDelete
  7. கொடுமையிலும் இனிமை அண்ணா :)
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ^_^

    ReplyDelete