முதுமையிலும் தடி பிடிக்காமல்
அதே இறுக்கத்துடன் உங்கள்
கை பிடித்து நடக்க வேண்டும்...
நம் இளமை காலத்தை
எண்ணி எண்ணி பொக்கை வாயை
அகலமாய் விரித்து சிரிக்க வேண்டும்....
அந்த வயதிலும்
உங்கள் வெளுத்த முடியை என் விரல்களில் இடையே
மெதுவாய் பின்னி செல்லமாய் இழுக்க வேண்டும்...
நீங்கள் கோபமாய் முறைக்க
நம் விழிகள் மோதிக்கொள்ள வேண்டும்...
பேத்தியின் கன்னத்தில்
பதிந்த உங்கள் முத்தத்தின் ஈரம் காயும் முன்னே
யாரும் அறியாமல் நான் அதை முழுதாய் ருசிக்க வேண்டும்...
என் மடியின் உங்கள் தலை சாய
என் நெற்றி உங்கள் இதழ் சேர
நம் மூச்சு ஒன்றாய் கலக்க
நம் இனிய வாழ்வை அசைப்போட்டுக்கொண்டே
மரணம் மறவாமல் நமை தழுவிக்கொள்ள வேண்டும்!!!
ha ha
ReplyDeletemc boy eppdi irukka
enga irukka oii