என் இனிய சினேகிதிக்கு,
என்னவென்று சொல்வேன்...
என் செவியில் இசைந்த குயிலின் குரலை...
நீ உதட்டிலிருந்து சிந்திய வார்த்தைகள்...
கூட்டிலிருந்து சிந்திய தேன்...
துளிகளாய் சிதறியது என் மீது...
என்ன விந்தையடி..பெண்ணே...
குயில் கூவுவதை கேட்டிருக்கிறேன்...
முதல் முறை கேட்கிறேன்...
ஒரு குயில் பேசுவதை...
கடவுளிடம் கோபிக்கிறேன்...
எனை இங்கு பிறக்க வைத்ததற்கும்...
மலரை எனை விட தூரமாக மலர செய்ததற்கும்
ஒரு முறை தான் வீசினாய் ...தென்றலாய்...
உன் இதழ்களின் இடையிலிருந்து
ஒரு முறைதான் சுவாசித்தேன்....
அந்த தென்றலே எனது உயிர் மூச்சாகிப் போனது....
குயிலின் இசையை மட்டும் கேட்கிறேன்...
குயில் முகம் காண துடிக்கிறது மனது...
நமது இதழ்கள் சிந்திய வார்த்தைகள் சந்தித்து விட்டன...
நமது விழிகள் சந்திப்பது எப்போது ?
என் வயதைக் குறைக்க ஆசைப்படுகிறேன்...
இளமையாவதற்கு அல்ல...
உன் மாணவனாவதற்குத்தான்...
பாடம் கற்க அல்ல...
உன் குரலைத் தினமும் கேட்பதற்கு...
நான் காற்றாய் பிறந்திருக்கக் கூடாதா?
உன் சுவாசமாகி...
இதழ்களின் இடையில் வார்த்தையெனும்
இசையாய் மாறி இருப்பேனே!
மலர்விழி என்றதும்...உன் விழிகள் மட்டும்
மலராய் இருக்குமென நினைத்தேன்...
மலரின் வாசத்தை வார்த்தையாக வீசுகிறாயே !!!
உன் இனிய சினேகிதன் :)
your blog text not visible please change your template
ReplyDelete